வல்லினச் சிறகுகள், கொக்கரக்கோ கவிதை இதழ்களின் ஆசிரியர் குழுவில் பங்களிப்பைச் செய்கிறேன். தி காமன் சென்ஸ், சிறகு மின்னதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறேன். மகாகவி தமிழன்பன் விருது 'அவன் நிற்கிறான்' கவிதைக்காக 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது
இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு முன்னும் கவிதைகள் எழுதியுள்ளேன் இந்தத் தொகுப்பிற்குப் பின்னும் கவிதைகள் எழுதுவைன் என்றாலும் கலைஞர் பற்றிய இந்த நூறு கவிதைகள் என் கவிதைப் பணியில் மிக முக்கிய மைல்கல். ஒரு மாபெரும் தலைவரை, எழுத்தாளரை, கவிஞரை என்னால் இயன்ற அளவு என் கவிதைகளால் எழுதிட முயன்றுள்ளேன்.