நமக்கெல்லாம் திராவிட இயக்கத்தினு மூலவரான தந்தை பெரியாரை காணும் வாய்ப்பைகாலம் நமக்கு வழங்கவில்லை. அய்யாவை தொடர்ந்து முன்னேருக்கு சரியான பின்னேராகப் பணியாற்றும் பேறும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் நாம் வாழும் காலத்தில் நம்மோடு இணைந்து இயைந்து பணியாற்றிய அய்யாவுக்கு அய்யாவாகவும் அண்ணாவுக்கு அண்ணாவாகவும் வாய்க்கப் பெற்ற ஒரே தலைவர் நம் திருக்குவளை தந்த திருமகன். கோபாலபுரத்து கோமான் தலைவர் கலைஞர் ஒருவரே...!! அந்த கருத்தோட்டத்தின் பயணமே என்னுடைய இந்த அய்யாவும் நீயே அண்ணாவும் நீயே என்ற இந்த சிறிய நூல்.