தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஐந்து முறை பதவி வகித்த காலஞ்சென்ற மாண்பமை டாக்டர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் ஒரு முக்கிய இந்திய அரசியல்வாதி, ராஜதந்திரி மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் தமிழக அரசியல் நிலப்பரப்பிலும் ஒட்டுமொத்த தேசத்திலும் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தார். அவர் 'கலைஞர்' என்றும் 'தலைவர்' என்றும் அழைக்கப்பட்ட 'பேராளுமை' ஆவார் 1924 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாட்டின் திருக்குவளை என்ற சிறிய கிராமத்தில் பறந்தார். அரசியர், இலக்கியம் மற்றும் சமூகச் செயல்பாட்டுத் தளங்களில் அவரது பயணம் அவரது நீடித்த பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகும். கலைஞரின் வாழ்க்கை பல தசாப்தங்களாக நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் அவர் தமிழ்நாட்டின் சமூகஅரசியல் சூழலை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.