எனது பார்வையில் முத்தமிழறிஞர் கலைஞரைப் பற்றி எழுதுவது என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகும். ஈழத்தமிழர் மீது மிக அழமான பற்றுக் கொண்ட ஒரு வரலாற்று நாயகனின் கதையை, விமர்சனங்கள் குவிக்கப்பட்ட ஒரு கோணத்தில் இருந்து எழுதுவது உண்மையில் ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து எழுதுவதற்கு ஒப்பானது!
இது வெறும் கலைஞர் புகழ் நூலல்ல. ஒரு இலங்கை தமிழர் பார்வையில் கலைஞரின் அரசியலும். வாழ்வியலும் எப்படி தெரிகிறது என்ற கோணத்தில்தான் இந்நூலை எழுதி உள்ளேன். எனவே தவிர்க்கவே முடியாத அளவு இது ஓர் அரசியல் நூலாகவும் அமைந்துள்ளது.