அற்புதப் பலன்களைத் தரும் அறுபது காய்கறிகள்
இயற்கையின் படைப்புகளான தாவரங்கள், நீர், காற்று. கனிமப் பொருட்கள் போன்றவை இல்லையெனில், மனிதகுலமே இல்லை. தாவரங்கள் உணவாக, உறைவிடமாக, மருத்துவமாக, தொழிலியல் ரீதியாக, பொருளாதார முறைப்படி பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. நாம் இவற்றை நட்டுப் பாதுகாத்து, வளர்ப்பதே இதற்கு நாம் செய்யும் பெரிய பிரதி உபகாரமாகும். இங்கு அற்புதப் பலன்களைத் தரும் அறுபது காய்கறிகள் என்ற தலைப்பில் 60-வகையான காய்கறிகள், அவற்றின் தோற்றம், தாவர விளக்கம், அறிவியல் பெயர், பல்வேறு மொழிப்பெயர்கள், குணங்கள், தொழிலியல் பயன்கள், மருத்துவப் பயன்கள் உட்பட பல தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன.