நமது உடல் மண்டலத்தில் என்னென்ன உறுப்புகள் உள்ளன? அவை எவ்வெவ்வாறு செயல்படுகின்றன என்பவற்றைப் பெற்ற தாயிடத்திலோ தந்தையிடத்திலோ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் மருத்துவர்களாக இருந்தால்தான் முடியும். நமது உடலைப்பற்றி நமக்கும் தெரியாது. நம்மைப் பெற்றவர்களுக்கும் தெரியாது. ஆனால் மருத்துவர்கள் வாயிலாக, மருத்துவ நூல்கள் வாயிலாகவே நமது உடல் மண்டலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியும். அதைப்போல்தான் இந்த உலக இயக்கங்கள், நிகழும் நிகழ்ச்சிகள் எல்லவாற்றையும் நாம் நேரில் சென்று பார்க்க இயலாது. எழுத்து வடிவில் எவ்வளவோ செய்திகளை நாம் அறிந்து கொள்கிறோம். அறிவை வளர்த்துக் கொள்கிறோம். அந்த அறிவை நமது வாழ்க்கைக்குப் பயன்படுத்துகிறோம். அல்லது பிறருக்குச் சொல்லிக்கொடுத்துப் பயன்படச் செய்கிறோம்.