உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் (DEMIC, TNAU)
தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் புதிதாக வந்துள்ள மற்றும் பரிவர்த்தகம் செய்யப்படும் வேளாண் பொருட்கள் பற்றிய தகவல்களை அக்மார்க்நெட் வாயிலாகப்பெற்று, சந்தை தகவல் மையம் செய்தி வெளியிடுகிறது. இத்தகவல்களைக் கொண்டு, பின் வரும் மாதங்களில், வேளாண் பொருட்களின் எதிர்கால விலை கணித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு அனுப்புவதுடன், அதனை வலைதளம், வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்கள் மூலம் விவசாயிகளுக்கும் கிடைக்கச் செய்கிறது. அண்டை மாநிலங்களில் உள்ள விலை நிலவரத் தகவல்களும் அளிக்கப்படும். இதனால் விவசாயிகள் தங்களின் பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும். மேலும் சரியான பயிர் சுழற்சி முறையை தேர்வு செய்து, உரிய நேரத்தில் மகசூல் எடுத்து நல்ல லாபம் பெற்றிடலாம்.