கண்டுபிடிப்புகளின் தாய்; தேவை என்று சொல்லப்படுவது கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் தான்.நமக்கு வியப்பூட்டும் விஷயங்களை ஆராய்ந்து அவற்றிற்கான விடைகளைத் தர முயற்சி செய்கிறவர்களே விஞ்ஞானிகள்,அறிஞர்கள், அறிவியல் மேதைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை கற்றறிந்து அதை புரிந்து கொள்ள முயலுகிறார்கள். உயிரியல் நிபுணர்கள் வாழும் உயிரினங்கள் பற்றி படிக்கிறார்கள்.புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பூமியைப் பற்றி படிக்கிறார்கள் ; வான சாஸ்திர நிபுணர்கள் நட்சித்திரங்கள், கோள்களை பற்றி படிக்கிறார்கள். எல்லா அறிஞர்களுமே விஷயங்களை அறிந்து அவர்கள் அறிந்தவற்றை விவரிக்க முயிற்சி செய்கிறார்கள். அவர்கள் கருத்தை பரிசோதித்துப் பார்க்க பரிசோதனைகள் நடத்துகின்றனர்.