ஈழத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரத்தினபுரத்தைச் சேர்ந்த தீபச்செல்வன் ஈழத்தின் முக்கிய கவிஞராக அறியப்பட்டவர். அதிகம் பேசப்பட்ட 'நடுகல்' என்ற நாவலை எழுதியவர். ஈழப்போராட்டத்தின் வலிமை மிகுந்த குரலாக இவருடைய எழுத்துக்கள் கருதப்படுகின்றன. ஈழத்தின் நான்காம் கட்டத்தில் இடம் பெற்ற போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதியதுடன் தொடர்ந்து ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்து வருகிறார். இவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், பிரசெஞ்சு,தெலுங்கு, பாரசீகம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.