இளைஞர்களை நெருங்கி, தோழமை ததும்பத் தோள்தொட்டுப் பேசுகிற தொனியில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்தப் தொகைதோறும். விழுவது இயற்கை -- விழுந்தவுடன் எழுவதே நம்பிக்கை என்கிற மூலக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. விழுதுகளாய் நீளும் விவேகமிருந்தால் வேர்களின் காயம் வேதனை தராது. என்கிற சூட்சுமத்தையும் இதில் சொல்லித் தருகிறார். வெற்றியின் விதைகளாய் விழும் இளைஞர்கள் எழும்போது பயிர்களாய் எழுவார்கள் என்பதனால், தரமான உரமாகத் தனது கவிதைகளைத் தருகிறார் கவிஞர் கவிதாசன்.