வளரும் இளைஞர்களுக்கு குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பேச்சுக்கலை பற்றி தங்களுடைய அனுபவத்தில் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் நூல் ஒன்றினை உருவாக்கினால் இளைய சமுதாயம் மிகவும் பயன்பெரும் என்று எனது நண்பரும் தமிழ்ப் பேராசிரியருமாகிய டாக்டர் கா. பாஸ்கரன் அவர்கள் தெரிவித்தார்கள்.அவருடைய தூண்டுதலின் பேரில் உருவானதுதான் இந்த வெற்றிமேடை 'எனது உள்ளத்தில் ஒரு நல்ல கருத்தை விதைத்த இனிய நண்பர் டாக்டர் கா. பாஸ்கரன் அவர்களுக்கு முதற்கண் எனது நன்றி.