நாறும்பூநாதனின் ஈரம் மிகுந்த மனம், ஒரு ஈரம் மிகுந்த நிலம் போல அவர் வாழ்வில் வந்து போனவர்கள் & மனிதர்கள் எப்படி வந்து போவார்கள்? அவர்கள் வருவார்கள், போவார்கள் எனினும் நம்முடன் தானே நினைவில் இருப்பார்கள் & பற்றி எழுதிய பதிவுகள் இவை. நாறும்பூநாதன் போன்ற சமூக உறவுகளும் தனிமனித உறவுகளும் நிரம்பியவர்களுக்கு இந்த இருபத்தி இரண்டு பேர் மட்டும் தானா மனதில் பதிந்திருப்பார்கள்?
....இப்படியாகத்தான் ஒவ்வொரு பகுதியிலும் மாயத்தைத் போன்ற மெய்யையும், புனைவைப் போன்ற நனவையும், ஒரு கதாபாத்திரம் போன்ற அசல் மனிதரையும் நாறும்பூ உண்டாக்கி நடமாடவிடுகிறார். அவரே சொல்கிறது போல அவருக்கு மனிதர்களை வாசிக்கப் பிடிக்கிறது. வாசித்த மனிதர்கள் பற்றி ஒரு கதைசொல்லி போலச் சொல்கிறார்.
வண்ணதாசன்