தழைகளை உடுத்து காய்கனிகளை உண்டு, குகைகளில் வாழ்ந்த முதல் மனிதன் விஞ்ஞான கலையின் துணையால் படிப்படியாக நாகரிகம் மிகுந்தவனானான். வாய்வதற்கு ஏற்ற வழிவகைகள்யாவை என அறிய அரும்பாடுபட்ட அவன்,இன்று தான்வாழவும் பிறரை வாழ்விக்கவும் அறிந்தான். இயற்கையின் சூழலில் வாழ்ந்து இயற்கைச் சக்திகளுக்கு அடிமையாய் வாழ்ந்த அவன் இன்று இயற்கைச் சக்திகளைத் தனக்கு அடிமையாக்கி வாழ்கிறான்.