தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி என்னும் த. நா. சேனாபதி (T. N. Senapati)
வங்காள மொழியைப் பயின்று அம்மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர்.
எழுத்தாளர். த. நா. சேனாபதி இளம்பருவத்திலே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டார்.
கலைமகள், மணிக்கொடி, ஆனந்த விகடன் ஆகியவை உள்ளிட்ட இதழ்களில் கதைகள்
எழுதினார். வங்காளத்தில் தங்கி, வங்காள மொழியை முழுவதுமாக
கற்றவர்.இரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, சரத் சந்திரர்,
தாராசங்கர் பானர்ஜி போன்ற வங்க மொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தன்
உடன்பிறப்பான த. நா. குமாரசாமியுடன் இணைந்து தமிழில் மொழிபெயர்த்தார்.