மனதில் உறுதி வேண்டும் என்று தொடங்கும் பாரதியாரின் கவிதையில் வரும் ஒரு வரி பெரிய கடவுள் காக்க வேண்டும் என்பது. பாரதியார் பாடாத தெய்வமில்லை. அப்படியிருக்க பாரதியின் பெரிய கடவுள் யார் என்ற கேள்விக்கு எங்கும் விடை காண இயலாதிருந்தபோது என் மனதில் திரண்ட சிந்தனையின் எழுத்து வடிவம்தான் பாரதியின் பெரிய கடவுள் யார்?