நவக்கிரக நாயகர்களிலே சூரியபகவானே - அரசர் என்று அழைக்கப்படுவர். அவரின் அருளாசியின்றி எந்த உயிரினங்களும் உயிர்வாழ்வதில்லை. அவரின் ஒளிக்கதிரின் வீச்சின்றி எதுவுமே நடைபெறாது. மேலை நாட்டு ஜோதிடர்கள் சூரியனையே முன்மையாக கருதுகிறார்கள். அவனின்றி ஓரணுவும் அசையாது என்பார்கள் பெரியோர்கள். அவன் என்பது சூரியபகவானையே. நமக்கு ஒளியையும், பிராணவாயுவையும் தருபவர். பயன் கருதாது அன்றாட பணியை தவறாது செய்து வருபவர். அவரது ஒளியால் பல பயன்களை அன்றாடம் நாம் பெற்று வருகிறோம். ஜோதிட நூல்களில் சூரியன் லக்கின முதல் 12 பாவங்களில் இருக்கும் நிலையில் என்ன பலன் தருவார் என்பதை சொல்லப்பட்டுள்ளது. பல நூல்களில் இருந்து 12 பாவங்களில் இருக்கும் நிலையில் என்ன பலன் தருவார் என்பதை உதாரண ஜாதங்களுடன் விளக்கமாக தந்திருக்கிறேன்.