வேறின்றி மரமும் இல்லை கிளையுமில்லை! வரலாறின்றி வாழ்க்கையே
இல்லை!! இதுவே வரலாற்று புதினங்களின் நிகரற்ற பெருமை. வாளரி வேந்தன் என்ற
இப்புதினம், நான் உயிருக்கு நிகராய் நேசிக்கும் எம் தமிழ் மண்ணை ஆண்ட
பல்லவர்களின்வரலாற்றைத் தழுவியது. வரலாற்றில் அதிக வெளிச்சம் பாய்ச்சப்படாத
காலமான கி.பி 450 -யில் நிகழ்ந்த ஒரு சரித்திர நிகழ்வு. மூன்று
இராஜ்யங்களின் இடையே மூண்ட யுத்தத்தின்கதையிது! மூன்று தலைமுறைகளுக்கும்
மேலாகத் தொடரும் பகையின் சரித்திரமிது!! முக்கோண களத்தில் நட்புக்காக
வாளேந்தும் பல்லவர்களின் வீரமிது!!! வீழ்த்த ஒருவன்.. வீழ ஒருவன்.. மீள
ஒருவன்..ஆள ஒருவன்.. யாரிவர்கள்? களம்காணும் இவ்வீரர்களை இக்கதையில்
பயணித்து அறிந்துகொள்வோம்...