மகாத்மா காந்தியின் 70ஆம் பிறந்த நாளன்று அதாவது 02.10.1939 அன்று சர்.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் "MAHATMA GANDHI Essays and Reflections of His Life and Work" என்னும் ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலை உருவாக்கி அண்ணலுக்குப் பிறந்த நாள் பரிசாக கொடுத்தார். அதில் உலகெங்கும் இருந்த அரசியல் தலைவர்களும், அறிஞர்களும், சிந்தனையாளர்களும் அண்ணலைப் பற்றி தங்கள் விமர்சனங்களை எழுதியிருந்தனர். இதைத்தயாரித்தவர் பின்னாளில் நம்முடைய குடியரசுத் தலைவராக வந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் என்னும் தத்துவப் பேராசிரியர்.
இந்த நூல் வெளிவந்த ஆண்டில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. அப்போது இரங்கூனில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்தால் தமிழ் மக்களுக்குப் பயன்தரும் என்று கருதினர்.