உறைந்துபோன இந்தக் காலகட்டத்தை, மௌனத்தில் விம்மிய கண்ணீரை, அன்பின் அடிப்படையில் உருவான பதட்டங்களை, மறந்துவிட வேண்டிய, ஆனால் மறந்துவிடக் கூடாத நாள்களைப் பதிவு செய்த அற்புதமான தொகுப்பு இது.
உமாமோகனுக்குக் கொரோனா என்றதும், இலக்கியவாதிகளும் நண்பர்களும் பதறியதை, முகநூலில் அன்பு பாராட்டியதை அறிவேன். அவர் மீண்டு வந்துவிடுவார் என்பது தெரியும். மீண்டு வந்தது மட்டுமல்ல; தமிழுக்கு ஆகச் சிறந்த ஓர் அரிய கவிதைத் தொகுப்பையும் தந்துள்ளார்.