பைத்தியக்காரர்கள் உள்ள ஒரு புகலிடத்திற்கு ஒரு பார்வையாளர் வந்தார்; அங்கிருந்த பைத்தியங்களில் ஒருவர், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஆடிக்கொண்டே ஒரு மென்மையான, திருப்தியான குரலில், "லுலு...லுலு." என்று திரும்பத்திரும்பச் சொல்கிறதை, அந்தப் பார்வை யாளர் பார்த்தார்."இந்த மனிதனுக்கு என்ன பிரச்சனை?" என்று அவர் வைத்தியரிடம் கேட்டார். "லுலு, அந்தப் பெண் அவரை ஏமாற்றிவிட்டாள்" என்று வைத்தியர் பதில் சொன்னார். அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகையில், பஞ்சு நிரம்பிய பல பைகள் பொதிந்துள்ள சுவர்களை உடைய ஒரு அறைக்கு வந்தனர்.