கொரோனாவை நாம் சந்தித்தபோதுதான் உலகம் இதுவரைகண்ட கொள்ளை நோய்கள் பற்றிய நினைவுகள் நம்மை ஆட்கொள்கின்றன. மனித குலம் எத்தனை எத்தனை பேரிடர்களை எதிர்கொண்டு கோடிக்கணக்கான மக்களை இழந்து மீண்டு வந்திருக்கிறது என்பதை இந்த நூலில் சென்பாலன் விவரிக்கிறார். வாழ்வுக்கும் அழிவுக்கும் இடையலான போராட்டத்தின் இன்னொரு கட்டத்தை நாம் கடந்துகொண்டிருக்கையில் இந்த வரலாறு தரும் காட்சிகள் நமக்குப் புதிய வெளிச்சங்களைத் தருகின்றன