உலகெலாம் ஓங்கிப் புகழ்பெற்ற கயிலாசநாதர் கோவில், இன்றைக்கு கி.பி. 1250 ஆண்டுகட்கு முன்பு, பிற்காலப் பல்லவர் ஆட்சி மகோன்னத நிலையில் இருந்த போது கட்டப்பட்டது. கட்டியவன்-இராசசிம்ம பல்லவன். அவன் இறுதிக் காலத்தையும், அவன் மகனான இரண்டாம் பரமேசுவரவர்மனைப் பற்றியும், அவனுக்குப் பிறகு பிற்காலப் பல்லவர் ஆட்சியில் புதிய மரபு தோன்றியதைப் பற்றியும் விளக்குவதே இந்நாவல்.