ஜெயகாந்தனின் புத்தகங்களில் இது பெரிதும் கொண்டாடப்படுவது. சில நேரங்களில் சில மனிதர்களை விட பாராட்டப்படுவது. நான் சமீபத்தில்தான் படித்தேன். சிறு வயதில் படித்திருந்தால் கதை, கதைப் பின்னல் (plot) என்று ஒன்றும் இல்லாததுதான் தெரிந்திருக்கும். ஒண்ணுமே நடக்கலியே என்றுதான் சொல்லி இருப்பேன். இப்போது ஹென்றி என்ற கதாபாத்திரம் தெரிகிறது, பாசம், பந்தம் எல்லாம் இருந்தும், இறந்து போன தன அப்பாவின் உறவினர்களை தேடிக்கொண்டு அவன் வந்தபோதும் அவன் ஒரு துறவி என்பது தெரிகிறது. துறவியை மதிப்பது என்பது நம் ரத்தத்திலேயே ஊறிவிட்டதோ?