எழுதுவதில் சொல் புதிதல்ல. வாக்கியம் புதிதல்ல. மொழி புதிதல்ல. கடனுக்குப் பெற்றதை கை மாற்றி விடுவதுதான். மொழியும் எழுத்தும் இரவல் பெற்ற ஜங்கமச் சொத்து. அதை உண்டு உயிர்த்து ஜனிப்பதில் ஒரு சுகம். மொழியென்ற பொக்கிசத்தை, மூதாதைகளின் கையளிப்பை சிந்தாமல் சிதறாமல் சின்னாபின்னமாக்காமல் ஒரு சொல் புதிதாக்கி அடுத்த சந்ததிக்கு திரும்பக் கையளித்துச் செல்லவேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறேன்.