இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு; சிறு துளி பெரு வெள்ளம் என பெரியவர்கள்
கூறுவது
உண்டு. சிறுக சிறுக சேமிக்கும் பணம் ஒரு நாள் பெரும் தொகையாக அதிகரித்து
குடும்ப அத்தியாவசிய தேவைக்கு உதவும் வகையில் அமைவதை குடும்பத்தினர்
கண்கூடாக
பார்த்திருக்கலாம். அந்தளவுக்கு நம் வருவாயில் குறிப்பிட்ட
ஒரு பகுதியை சேமிக்க தெரிந்திருக்க வேண்டும். இ வாலட், நெட் பேங்கிங்,
கிரெடிட், டெபிட் கார்டு போன்ற இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும்
இக்கால கட்டத்திலும் மாணவர்களை சிறு சேமிப்பில் ஈடுபடுத்துவது அவசியம்.
இந்திய பொருளாதாரத்தின் நிலைத்தன்மை மற்றும் பண்பாடு, கலாசாரம்
அடிப்படையில் சேமிப்பு சார்ந்த கட்டமைப்பாக இருக்கிறது. இந்திய வங்கிகள்
திவாலாகாமல் இருக்க சேமிப்பும் முக்கிய காரணமாகும்.கடந்தாண்டு நவம்பரில் உயர்மதிப்பு மிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்தியஅரசு
அறிவித்தது. அந்த காலக் கட்டத்தில் அனைவரும் பொருட்கள் வாங்க முடியாமல்
அவதியுற்றனர். கையிலிருந்த செல்லத்தக்க நோட்டுகளைசெலவழித்து விட்டு
தவித்தவர்கள் பலர். சில குடும்பங்களில் சேர்த்து வைத்திருந்த
உண்டியல்களில் இருந்து பணத்தை எடுத்து செலவை சமாளித்தனர். இது
சிறுசேமிப்பின் அவசியத்தை அனைவரும் உணர செய்தது.