ஆட்டிசம் எனப்படும் அறிவுத்திறன் குறைபாடு, குழந்தைகளுக்கு மூளை வளா்ச்சி
குறைவதால் ஏற்படும் நோய் என்றே பலரும் நினைக்கின்றனா். ஆனால், அது நோய்
அல்ல, ஒரு வகை நரம்பியல் குறைபாடுதான் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அறிவுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படிக் கையாள
வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை
உணா்த்தும் வகையில் ஆண்டுதோறும் விழிப்புணா்வு தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.பிற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, செயல்திறன் குறைவாக இருக்கும் இத்தகைய
குழந்தைகளிடம் கூடுதல் கவனம் செலுத்தி, அவா்களைத் தொடா்ந்து இயக்கத்தில்
வைத்து, பயிற்சி அளிப்பது பலனைத் தரும் என மருத்துவா்கள் கூறுகின்றனா்.
இந்தியாவில் சுமாா் ஒரு கோடி குழந்தைகள் இந்தக் குறைபாட்டால்
பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குழந்தை பிறந்த 10 மாதங்களில்
இருந்து 24 மாதங்களுக்குள் செயல்திறனைக் கண்டறிந்து, உடனடியாக அதற்கான
பயிற்சி முறைகளை அளித்தால் இயல்பான நிலையை அடைவதற்கான வாய்ப்புள்ளதாக
மருத்துவா்கள் கூறுகின்றனா்.