நோயாளிகளை ஒரு கண்ணாகவும் சித்த மருத்துவத்தை இன்னொரு கண்ணாகவும் கொண்டு நான் பார்த்த பார்வைதான் இந்த புத்தகம்.ஒரு புது வெள்ளம் போல சித்த மருத்துவம் பற்றிய ‘அறிமுகம்’ பெருகி ஓடி
வருகிறது. புது வெள்ளத்தில் வரும் குப்பைகள் போல தவறான கருத்துகளும் சித்த
மருத்துவத்தைப் பற்றி பரவ ஆரம்பித்திருக்கின்றது. அதாவது சித்த
மருத்துவத்தைப் பற்றிய ‘அறிமுகம்’ கிடைக்கிறதே தவிர, சரியான ‘அறிமுகம்’
கிடைக்கவில்லை. ஒரு சில தவறான கருத்துக்களை சரி செய்வதற்கு இந்த புத்தகம்
பயன்படுமானால், அது சித்த மருத்துவத்துக்கான வெற்றியை விரைவுபடுத்துவதற்கு
ஒரு கருவியாக அமையும்.”