உறவுகளின் முக்கியத்துவத்தையும், தாய்மையின் மகத்துவத்தையும் மேன்மைப்படுத்திக் காட்டும் ஓர் அழகான கதை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மறந்து, தனித்தனித் தீவுகளாய் மாறிப்போன குடும்பங்களுக்கு, கூட்டுக் குடும்பத்தின் அன்பையும் அரவணைப்பையும் எடுத்துக் கூறும் விதமாக இக்கதையின் போக்கு இருக்கும். இன்றைய இயந்திர வாழ்க்கை முறையால் கவரப்பட்டு, பகட்டும்... பெருமையும்...என மற்றவர்களின் பாராட்டுக்காக வாழும் வாழ்க்கை முறை ஏற்படுத்தும் அதீத பாதிப்புக்களை கோடிட்டு காட்டுவதற்காக, பத்மாவும் ஸ்ரீனியும் இங்கே நாயகி-நாயகன் வேடம் பூண்டிருக்கிறார்கள்