நண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நினைவுகளும் மதிப்பீடுகளும் அடங்கிய நூல் இது. மலையாளத்திரையுலகம் கண்ட மகத்தான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரால ஏ.கே.லோகித தாஸ் ஆசிரியருடன் நெருக்கமான உறவுள்ளவர். 2009 அன்று தன் 55 ஆவது வயதில் மறைந்த லோகிததாஸ் இப்பக்கங்களில் சொற்களின் புத்துலகில் மீண்டும் பிறந்து வருகிறார். கூடவே மலையாளச் சினிமாச்சூழல் குறித்த ஓர் அறிமுகமும் அலசலுமாக ஆகும் நூல் இது.