கியூபாவின் வாழ்க்கைத் தடத்தை புரிந்துகொள்ள இந்த கியூபாவின் இலக்கியத்தடம்' பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
சின்னஞ்சிறு நாடான கியூபா தனது சொசலிஸ சாதனைகளாலும் சர்வதேச மனிதநேயச் செயல்களாலும், அகில உலகை
ஆட்டிப்படைப்பதில் வெறிகொண்டுள்ள அமெரிக்காவின் கொடூரக்கண்களை உறுத்திக்கொண்டிருக்கிறது. அமைதிப் பயணத்தை
விரும்புவதால் கியூபமக்கள் அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கு அடிபணிந்து விடமாட்டார்கள் என்பது அமெரிக்காவிற்கே தெரியும்.
கியூபாவிற்கு எதிரான பொருளாதார முற்றுகை, பொருளாதாரத்தடை, உலகளவில் கேவலமான பொய்பிரச்சாரங்கள் உள்ளிட்ட
எத்தனையோ ஆயுதங்களை அமெரிக்கா கையாண்டாலும் கியூபாவிற்கு அமெரிக்கா உட்பட உலகில் ஜனநாயக சக்திகளது ஆதரவும் உறுதுணையும் பெருகிவருகின்றன. இந்தப்பிரச்சனை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள பின்னணியில் லதாராமகிருஷ்ணன் எழுதியுள்ள கியூபாவின் இலக்கித்தடம் என்னும் இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
- பதிப்பகத்தார்.