'சிறுவர்க்கான கொங்கு நாட்டுக் குட்டிக்கதைகள் ' என்னும் இந்நூலில் மொத்தம் 22 கதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளை படிக்கும்போது சலிப்புத் தட்டாமலிருக்க சிறு சிறு கதைகளாக எளிய நடையில் அமைந்துள்ளேன்.
பேரரசர்கள், குறுநில மன்னர்கள், பிற்கால ஜமீன்தார்கள், புலவர்கள், பாமர மக்கள் ஆகியவர்களுடன் தொடர்புடைய கதைகள் இவை.
தமிழகத்தில் பெரும் புலவர்களாக விளங்கிய ஔவையார், கம்பர், பவணந்திமுனிவர், சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், படிக்காசுப்புலவர், பெருங்கதையை எழுதிய கொங்கு வேளிர் ஆகியவர்கள் முதல் எளிய உள்ளூர்ப் புலவர்கள் கூட கொங்கு நாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்.
இந்நூலில் கூறப்பட்டுள்ள கதைகளில் வரும் ஆட்சியாளர்களின் வம்சாவழியினர் இன்றும் கூட அந்தந்த ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக காங்கேயர், சர்க்கரை மன்றாடியார், வானவராயர் ஆகிய மரபினர் இன்றும் பழைய சிறப்புடன் உள்ளனர்.