book

அதற்கொரு நேரம் வரும்

Atharkoru Neram Varum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

வலிமை என்பது வாழ்வு ! வலிவின்மை இறப்பு!' இங்கு விவேகானந்தர் குறிப்பிட்டது மனவலிமையை! அது இருந்தால் எப்பேற்பட்ட துன்பங்களையும் சமாளிக்கலாம்! அந்த வலிமை இல்லை என்றால்...? தினம் செய்தித் தாள்கள் பலவிதமான 'இறப்புக்களை'ச் சுமந்து வருகிறது! பல வருடம் முன் என் மனதை பாதித்த ஒரு செய்தி! ஒரு 'பாரில்' (Bar) வேலை செய்த அழகி தூக்கில் தொங்கினாள். அவளது மிக அழகான படம்! இள வயது, அழகும், இளமையுமே எமனானது! போலீஸ் கமிஷனருக்குக் கடிதம் எழுதி வைத்து இறந்து போனாள்! அவளைக் காப்பாற்ற யாருமே இல்லை! இந்தப் பரந்த உலகில் ஒரே ஒரு, அன்பான கருணை மிக்க ஜீவன் இருந்திருந்தால், அந்த உயிர் காப்பாற்றப்பட் டிருக்குமல்லவா? நாலு மாதமுன், செய்தித்தாளில், பாரில் பணிபுரியும் பெண்களுக்கும், கௌரவமான உடை! அரசு ஆணை இன்னும் மூன்று மாதத்தில்!