
கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை
Kanneer Thuligalukku Mugavari Illai
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
ஒளி
எல்லா இடங்களிலும்
ஒளிந்திருக்கிறது
அது சில சந்தர்ப்பங்களில்
வெளிப்படுகிறது
மேகத்திலிருந்து
மின்னலைப் போல்
கல்லிலிருந்து
தீப்பொறி போல்
கவிதையும் அப்படித்தான்
ஒளி
காணும் பொருள்களிலும்
இருக்கிறது
கவிஞனுக்குள்ளும்
இருக்கிறது
மின்னல்களை
தீப்பொறிகளை
மறைந்து விடாமல்
பாதுகாத்து வைப்பதுதான்
கவிஞனுடைய வேலை
அதைத்தான்
நான் செய்திருக்கிறேன்
ஒவ்வொரு மின்னலும்
ஒவ்வொரு தீப்பொறியும்
பார்ப்பதற்குத்
தனித்தனியாகத் தெரியும்
ஆனால் அவை
உண்மையில் ஒன்றே
ஆதியிலி ஒளி
தேவனிடம் இருந்தது
அது
தேவனாக இருந்தது
இறைவன்
முதலில் வெளிப்படுத்தியது
ஒளியைத்தான்
அதில் இறைவன்
தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டான்
அந்த ஒளியிலிருந்துதான்
பிரபஞ்சம் படைக்கப்பட்டது
கவிஞனும்
அந்த ஒளியால்தான்
படைக்கிறான்
என்று இந்நூலைப் பற்றி அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
