book

கால்டுவெல் ஐயர் சரிதம்

Galdwel Iyar Saritham

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுப்பிள்ளை
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :4
Published on :2010
Add to Cart

மொழிநூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் பத்தொன்பதாம்
நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத் தொண்டு புரியப் போந்தார்.

அத்தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழி பயின்றபோது

அம்மொழியின் நீர்மை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது; தென்

மொழியாய தமிழொடு தென்னிந்தியாவில் வழங்கும் பிற மொழிகளை

ஒத்து நோக்கித் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும்

உயரிய நூலை ஆங்கிலத்தில் இயற்றினார். அந்நூல் திராவிட

மொழிகளுக்குப் புத்துயிர் அளித்ததென்றும் கூறுதல் மிகையாகாது.

கால்டுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாகக் கொண்டார்;

தென் தமிழ் நாடாய பொருனை நாட்டில் *ஐம்பதாண்டுக்கு மேலாக

வதிந்து அருந்தொண்டாற்றினார். ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தார்;

சமய ஒழுக்கத்தைப் பேணக் கருதிக் திருச்சபைகள் நிறுவினார்;

தூர்ந்து கிடந்த துறைகளைத் துருவினார்; திருநெல்வேலிச்

சரித்திரத்தை வரன் முறையாக எழுதி உதவினார்