book

இல்லறக்குறள் இசைப்பாடல்கள்

Illarakural Isaipaadalgal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம்
Add to Cart

 வள்ளுவர் வீட்டைவிட்டுக் காட்டுக்கு ஓடித் தவம் செய்யச் சொல்லவில்லை. வீட்டில் இருந்தே இல்லறத் தவம் செய்யச் சொல்கிறார். கணவன் - மனைவி இருவரையும் கருத்தொருமித்து வாழத்தூண்டுகிறார். பிள்ளைகளைப் பண்புடன் வளர்க்கச் சொல்கிறார். பெற்றோருக்குப் பிள்ளைகள் பயன் செய்யவேண்டும் என்று அறிவிறுத்துகிறார்.

 ஒருத்திக்கு ஒருவன் என்று மட்டும் வலியுறுத்தாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்றும் உறுதிகொள்ளத் திருக்குறள் பாதை காட்டுகிறது. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில் குடும்பக் குதூகல வாழ்வுக்குத் தேவையான 25 அதிகாரங்களில் உள்ள குறட்பாக்களின் பொருளை இசைப் பாடல்களாளக்கித் தந்துள்ளேன். ஒவ்வொரு பாடல் வரிகளும் எளிதில் உள்ளத்தில் பதிந்து இனிய இல்லறம் நடத்திட வழிகாட்டும். வள்ளுவன் சொல்லாத வாழ்வு நெறி இல்லை. இந்நூலை வாங்கிப் படிக்கும் உங்கள் வாழ்வில் இன்பமே எல்லை.