book

கவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள்

Thalaiyangangal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராம. கண்ணப்பன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :10
Published on :2013
ISBN :9788184020120
Add to Cart

பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவு. இதனால் 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி விட்டார். முதலில் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி பல ஸ்டுடியோக்களின் வாசற்படிகளில் ஏறி இறங்கினார் கண்ணதாசன். ஆனால் அவ்வளவு எளிதில் வசப்படவில்லை. சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள கோவிலிலேயே பல நாட்கள் பசி, பட்டினியுடன் படுத்துக் கிடந்தார்.
பின்னர் ஒரு நிறுவனத்தில் எடுபிடி வேலை கிடைத்தது. அப்போது முதல் கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதை அச்சில் வந்த உற்சாகத்தில் இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார்.