book

மலைகளின் கதை

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை.பிஎல். முத்தையா
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

உலகில் மலையைப் பற்றித் தெரியாதவர்கள் (சிறுவர், சிறுமியர் உள்பட) எவருமே இருக்க மாட்டார்கள்.
இமயமலையைப் பற்றித் தெரிந்து கொள்ளாத இந்தியச் சிறுவர், சிறுமியர் உண்டோ ?
உலகில் உள்ள எல்லாச் சிகரங்களைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த சிகரமான 'எவரெஸ்டு' சிகரம் அதில்தானே இருக்கிறது! உலகில் உள்ள மற்ற மலைகளைவிட பிந்தியது என்றால், வியப்பாக இல்லையா? மற்ற மலைகள் தோன்றிய கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின், இமயமலை கடலின் அடியிலிருந்து உயர்ந்து இருக்கிறது!
மலைக்கு வயது உண்டா ? மலை வளர்கிறதா? அது தானாகவே உண்டாயிற்றா? கடலுக்கு அடியில் மலைகள் உண்டா ? அவை எப்படி மேலே எழும்புகின்றன? இவைபோன்ற சுவையான செய்திகளைத்தான் இங்கே காணப்போகிறீர்கள்.
மலையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்,புவி இயலையே (Geology) தெரிந்து கொண்டு விடுவீர்கள்.
மலையின் கதை பாறையில் இருக்கிறது. பாறையின் கதை இலையில் உள்ளது. இலை ஒரு சமயம் பாறையாக இருந்திருக்கிறது. மலையின் இரகசியம் இதுதான்!