
கருநாகபுர கிராமம் - சிவப்பின் நிறம் கருப்பு (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789390771370
Out of StockAdd to Alert List
கருநாகபுர கிராமம்: கருநாகபுர கிராமத்தில் அடுக்கடுக்கான மரணங்கள்.. அதுவும் மர்மமான முறையில். காரணம் அறியாமல் கைவிடப்படுகிறது அந்த வழக்கு. இதற்குமுன், அந்த வழக்கை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரிகள் உயிருடன் திரும்பியதில்லை என்ற அபாயம் அறிந்தே கருநாகபுர கிராமத்திற்கு செல்கிறார் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர், சந்தோஷ். விசாரணை ஆரம்பித்த சில மணிநேரத்திலேயே சந்தோஷூக்கு அமானுஷ்யமான, ஆச்சரியமான நிகழ்வுகள் மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் நடக்கின்றன. கருநாக சித்தரின் சாபம், கலியுகன் மற்றும் கலியுகம் பற்றிய கதைகள் என அவர் கேள்விபடும் விஷயங்கள் எல்லாமே, மேலும் மேலும் விசாரணையின் கோணத்தை திசை மாறச் செய்கிறது.இவற்றையெல்லாம் நம்பலாமா இல்லை நம்பக்கூடாதா என தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் உண்மைதன்மை அறிய போராடுகிறார். அந்த போராட்டம், அதன் விளைவுகள், உங்களை திடுக்கிட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிவப்பின் நிறம் கருப்பு: நெடுஞ்சாலையில் சாலை விபத்தால் காயமடைந்த நபரைப் பற்றி போலீஸ்க்கு தெரிவிக்கிறாள், துணிச்சல் மிகுந்த இளம் பெண்டாக்டர் அருணா. ஆனால், அதுவே பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டாள். விபத்தில் சிக்கிய நபருக்கும் அருணாவுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் முதற்கட்ட விசாரணையில் கிடைக்கின்றன. அதை மறுக்கிறாள் அருணா. ஆனால், காவல்துறை அதிகாரிகளின் விசாரணை அவளை நோக்கி பாய்கிறது. அதே நேரத்தில்,வித்தியாசமான முறையில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அது காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைகிறது. அதன் ஆதியும் அந்தமும் புரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்கிறார்கள். குற்றவாளி யார் என அறியும்போது நீங்கள் அதிர்ச்சியில் மீள சிலமணிநேரம் ஆகலாம்.
