book

பராசரப் பட்டரின் அஷ்டச்லோகி

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சடகோப முத்துசீனிவாசன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரங்கேச புரோஹித
ஸ்ரீவத் சாங்க ஸூதஸ் ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே –ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பராசர பட்டார்யா -ஸ்ரீ பராசர பட்டர் என்ற பெரியார்
ஸ்ரீ ரங்கேச புரோஹித – ஸ்ரீ ரெங்க நாதனுக்கு  புரோஹிதரும் –
எம்பெருமானார் திருவரங்கத்தமுதனார் இடம் கூரத் ஆழ்வானுக்கு வாங்கித் தந்த புரோஹிதம் –
ஸ்ரீ மான் -திருவாளருமான-ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மி -தனமாய தானே கைகூடும் -கருவிலே திருவாளர் -எம்பெருமானார் சம்பந்தமே சிறந்த செல்வம் –
ஜாதோ லஷ்மண மிச்ர சம்ஸ்ரய தாநாத் ஸ்ரீ வத்ஸ சிஹ்நாத் ருஷே -எம்பெருமானை ஆஸ்ரயித்ததல் ஆகிய செல்வம் படைத்த
ஆழ்வான் ருஷியின் குமாரர் என்று தாமே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில் அருளியது போலே –
ஸ்ரீவத் சாங்க ஸூதஸ் -ஸ்ரீ கூரத் தாழ்வான் யுடைய திரு மைந்தரும் -ராஜகுமாரன் என்றால் போலே –
ஸ்ரேயசே- மேஸ்து பூயஸே –மே பூயஸே ஸ்ரேயஸே  – அஸ்தே -எனக்கு அதிகமான -நன்மையின் பொருட்டு -ஆயிடுக-

தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்றபடி ஆசார்யர் அபிமானத்தில் ஒதுங்கி
ஆசார்யன் தரக் கொள்ளும் ஸ்ரேயசே சிறந்தது என்பதால் பூயஸ அடைமொழி-

ஸ்ரீ ஆளவந்தார் திரு உள்ளத்தின் படி இடப்பட்ட திரு நாமம் -பராசரர் -பட்டர் -சாஸ்திரம் அறிந்தவர் -ஆர்யர் -சிறப்புடையவர் –
அதத்த்வேப்ய தூராத் யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா -ஸ்ரீ வேதாந்த தேசிகர் –
அண்ணிக்கும் அமுதூரும் -சொலப்புகில் வாயமுதம் பரக்கும்-ஆசார்யன் திரு நாமம் –
ஸ்ரீ ரெங்க நாதன் -இயற்பெயர் –

சீரார் பராசர பட்டர் திருவரங்கத்
தூரானுக்குக் குற்ற புரோகிதனாம் -கூரத்தின்
ஆழ்வான் புதல்வன் அருஞ்செல்வன் எற்குயர்ந்த
வாழ்வாக வாய்க்க மகிழ்ந்து –
எற்கு -எனக்கு என்றபடி-