என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
ஏறக்குறைய ஐயாயிரம் திரையிசைப் பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். அவற்றுள் பல பாடல்கள் ஆங்கிலக் கவிஞர்களான கீட்ஸ், ஷெல்லி, பைரன் ஆகியோரின் படைப்புகளுக்கு நிகரானவை. கவியரசரின் உலகத் தரம் வாய்ந்த எத்தனையோ பாடல்களில் 17 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, காலம் வென்ற அக்கானங்களின் மூலம் என்னவென்றும், முகவரி என்னவென்றும் தமிழருவி மணியன் திறனாய்ந்திருக்கிறார்.
ஆறு மனமே ஆறு.., பிறக்கும்போதும் அழுகின்றாய்.., அண்ணன் என்னடா, தம்பி என்னடா.. உள்ளிட்ட தத்துவ சோகப்பாடல்களிலும், எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்..., ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் உள்ளிட்ட துள்ளல் இசைப் பாடல்களிலும், ஓராயிரம் பார்வையிலே..., பொன்னை விரும்பும் பூமியிலே... உள்ளிட்ட காதல் பாடல்களிலும் கவியரசரின் மொழி ஆளுமையும், வலி நிறைந்த சொந்த அனுபவத்தின் வழியாக வந்து விழுந்த வரிகளையும் பல்வேறு கோணங்களில் நூலாசிரியர் சுவைபட விவரிக்கிறார்.