book

செங்கிஸ்கான்

₹266+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எல்.வி. மூர்த்தி
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :232
பதிப்பு :2
ISBN :9789388006002
Add to Cart

குளிர் வாட்டி எடுக்கும் மங்கோலிய சமவெளி, ஆசியா கண்டத்தில் உள்ளது. அங்கு தான், மங்கோலியப் பேரரசனாக உயர்ந்த, செங்கிஸ்கான் என்ற டெமுஜின் பிறந்து வளர்ந்தான். டெமுஜின் என்றால், 'எக்கு இரும்பு' என்று பொருள்.

தந்தை யெசுகாய்; மங்கோலியப் பழங்குடி இன தலைவராக இருந்தார். காட்டிலும், மேட்டிலும் இளமைப் பருவத்தைக் கழித்த செங்கிஸ்கான், பெரிய குதிரைகளில் சவாரி செய்வான்; வேட்டையாடுவான்.

ஒன்பதாவது வயதில், மற்றொரு பழங்குடி இனத்தவருடன் தங்கி, பயிற்சி பெற்றான். அப்போது, தன் தந்தையை, எதிரிகள் விஷம் வைத்து கொன்றதை அறிந்து, கடும் கோபத்துடன் திரும்பி வந்தான்.

தந்தை வகித்த தலைவர் பதவியை ஏற்க நினைத்த அவனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. அதே இனத்தைச் சேர்ந்த, மற்றொருவன் தலைவர் பதவியைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

தப்பிய டெமுஜின் குடும்பத்தினர், காட்டில் மறைந்து வாழ்ந்தனர். குளிரிலும், குடும்பத்தினரைத் தேடி கண்டுபிடித்தான்; தந்தையைக் கொன்றவர்களை பழி வாங்க திட்டமிட்டான்.

தனக்கு ஆதரவாக, பழங்குடி மக்களை ஒருங்கிணைத்தான்; மற்றொரு பழங்குடி இனப் பெண்ணை திருமணம் செய்து, அந்த குழுவுடன் கூட்டணி அமைத்தான்.

அவன் துணிச்சல் கண்டு, ஆதரவாளர்கள் பெருகினர். படை பலத்தை பெருக்கியவுடன், எதிரிப் படையை, இரக்கமின்றி சிதைத்தான்; எதிரிகளை வெட்டி வீசி, வெற்றி வாகை சூடினான்.

அப்போது மங்கோலியர், பல குழுக்களாக பிரிந்து, தங்களுக்குள் சண்டை இட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை இணைத்து, ஆட்சி செய்தான். இதனால், 'செங்கிஸ்கான்' என்ற பெயரை அவனுக்கு பழங்குடியினர் சூட்டினர். அதற்கு, 'அனைவரையும் ஆள்பவன்' என்பது பொருள்.

படையை நிர்வகிப்பதில், புது உத்திகளைக் கையாண்டான். படையை தலா, 1,000 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து, 'குரான்' என்று பெயரிட்டான். புகையை உருவாக்கி, சமிக்ஞை கொடுப்பது, கொடியசைப்பு, முரசுச் சத்தம் போன்றவற்றால், தகவல் பரிமாறும் யுத்திகளை போரில் பின்பற்றினான்.