book

வேலை வாய்ப்பு யோகமும் கைரேகை விஞ்ஞானமும்

₹78+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஞ்சி எஸ். சண்முகம்
பதிப்பகம் :கணபதி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ganapathi Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :206
பதிப்பு :1
Published on :2012
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

‘வேலை வாய்ப்பு யோகமும் கைரேகை விஞ்ஞானமும்’ என்ற இந்த நூலை எழுத எண்ணத்தை அளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி கூறி, இந்நூலை எளிதியதற்கான நோக்கத்தையும் கூற விரும்புகிறேன்.

எனது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடுமோ, எங்கே சென்றால் எந்த வேலை, அரசு வேலையா? தனியார் வேலையா? தொழில் கல்வி படித்துவிட்டாலும் படிப்புக்கேற்ற வேலையா? வேலை எப்போது? படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை எந்த வேலை? வேலை எங்கே? வேலை எங்கே?..என ஊர்விட்டு ஊர்வந்து, ஏதோ  ஒரு வேலை என்ற அச்சநிலை மாறி அவர்கள் எதிர்காலம் சிறப்படைய வேண்டும். 

அவர்கள் சிறப்படைய வேண்டுமெனில், அவர்களிடமுள்ள இயற்கையான ஆற்றலை, அறிவினை பட்டை தீட்டி அவர்களுக்கும், சமுதாயத்திற்கும் சிறப்பினை சேர்க்கிற வேலை எது? என்பதை அவர்களின் கைரேகையைக்கொண்டே கண்டறிந்து, அவர்களின் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கிற அந்த அற்புத சக்தியை தட்டி எழுப்ப வேண்டும். அந்தஉன்னதஆற்றலைஅவர்களையேஅறிந்துகொள்ளச்செய்யவேண்டும். அதற்கு கைரேகைக் கலை எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை பல ஆண்டுகளாக பல ஆயிரம் கைரேகைகளையும், சாதகங்களையும் ஆய்வு செய்து, ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து, துறைவாரியாக பிரித்து ஒரு வேலைவாய்ப்பு அகராதிப் போல வேலை வாய்ப்பு தேடுவோருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் நீண்ட காலமாக இருந்து கொண்டே இருந்தது. இறைவன் அளித்த அந்த எண்ணத்தின் தாக்கம்தான் இந்த 'வேலைவாய்ப்பு யோகமும் கைரேகை விஞ்ஞானமும்' என்ற கைரேகைஆய்வு நூல். இந்நூல் வேலை தேடுவோருக்கு மட்டுமன்றி சோதிட, கைரேகை ஆர்வலர்களுக்கும், சோதிடம் பயின்று வரும் இளம் சோதிடர்களுக்கும் நிச்சயம் பயன் அளிக்கும்.

சோதிட ஆராய்ச்சி சிந்தனைகளை எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்வது சோதிட ஆர்வமுள்ள இளம் சோதிடர்களின் கடமையாகும். இந்நூலினை நீங்கள் படித்துப் பயன்பெறுவதுடன் உங்களை சார்ந்திருப்போரும் பயன் அடைந்து வேலை வாய்ப்பினைப் பெற்று மகிழ்ச்சியுடன், மன அமைதியுடனும் வாழ வேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன். எனது ஏழாவது படைப்பான இந்நூல் வெளியாவதற்கு உதவியாக இருந்த அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும், அச்சிட்டு வழங்கிய சிவகாமி பிரிண்டோகிராபிக்ஸ் உரிமையாளருக்கும் எனது நன்றி.