book

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

₹500
எழுத்தாளர் :க. வெள்ளைவாரணனார்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :605
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789387597228
Add to Cart

எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய முதல்வனைத் தென்னாட்டவராகிய தமிழ்மக்கள் சிவன் என்ற திருப்பெயராற் போற்றி வழிபட்டனர் என்பது தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனவரும் திருவாசகச் செழுமறையால் இனிதுபுலனாம். சிவபெருமானை வழிபட்டு அம் முதல்வனது திருவருட்டுணை கொண்டு உலகுயிர்கள் இயங்குந் திறத்தினைத் தமது வாழ்வியல் நுகர்ச்சியிற் கண்டு தெளிந்த தமிழ் மக்கள் தமது வாழ்வியலின் முடிந்த முடிவாகக் கண்டுணர்ந்த மெய்யுணர்வுக் கொள்கை இடைக்காலத்திற் சைவசித்தாந்தம் என்ற பெயரால் வழங்கப் பெறுவதாயிற்று.