book

மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்)

Sittharkalin Mutthiraikal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோக சித்தர் மானோஸ்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2015
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Out of Stock
Add to Alert List

உங்களுக்கு இப்பொழுது என்ன நேரிடுகிறது? என்று சொல்லுங்கள். நீங்கள் இறப்பதற்கு முன் கூறும் கடைசி செய்தியாக இருக்கட்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் மெல்லக் கண்களைத் திறந்து, "கடவுள் என்னை வரவேற்றுக் கொண்டிருக்கிறார். நான் அவரது அணைப்பிற்காகச் செல்லுகிறேன். நன்றி, வணக்கம்! என்று கூறி அவர் கண்களை மூடினார். அவர் மூச்சும் நின்றது. அவர் மூச்சு நின்ற அந்த வினாடியில் அவர் ஒரு பெரிய பிரகாசமாகத் தோன்றி அந்த அறை முழுவதுமாகப் பரவி, பிறகு மறைந்தது. எவன் ஒருவன் தன்னிடமுள்ள அந்த மையப் பொருளை அறிந்திருக்கிறானோ, அவனுக்கு மரணம் என்பது கடவுளின் அடுத்த முகம் என்று அறிவர். அப்பொழுது மரணம் ஒரு தெய்வீக நடனம் போல் விளங்கும். நீங்கள் மரணத்தை எப்பொழுது ஒரு கொண்டாட்டமாக கருத முடியவில்லையோ அப்பொழுது நீங்கள் வாழ்வைத் தவற விட்டு விட்டீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். இந்த முடிவான மரணத்தை எதிர் கொள்வதற்காகவே, நாம் வாழ்வை முழுவதுமாகத் தயார் செய்யவேண்டும் என்ற உண்மையை அறிய வேண்டும். அதனால்தான் வாழ்வது எப்படி என்பதை அறிவதற்கு வாழ்வில் அன்றாடம் யோகா, தியானம், முத்திரைகள் என்ற பயிற்சிகளை மேற்கொள்வோமானால் சிந்தையில் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்தால் மரணத்தினை கண்டு அஞ்சுவதற்கும் இடமில்லாமல் போய் விடும். யோகா, தியானம், முத்திரைகள் பயின்று தேர்ச்சி பெற்றவனானால் ஓர் உண்மையான ஆன்மீகவாதி ஆவாய்.