
மகர ஸங்க்ராந்தி பூஜை
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :32
பதிப்பு :9
Published on :2013
ISBN :9788179500811
Add to Cartசூரியனின் தேர் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினம்
இது. இன்றிலிருந்து ஆறுமாதங்கள் தேவலோகத்தில் பகல்நேரம். பயிர்கள்
செழுமையாக வளர நீர் நிலைகளிலுள்ள நீரை மேகங்களுக்கு எடுத்துச் செல்ல
சூரியக் கதிர்கள் உதவுகின்றன. அவன் உபகாரத்தால் வளர்ந்த கரும்பு, நெல்,
மஞ்சள், இஞ்சிக் குலைகள் இவற்றை வைத்து பொங்கல் பண்டிகையைக்
கொண்டாடுகின்றோம். பெண்கள் சூரியன் உதிக்கு முன் எழுந்து வாசலில் நீர்
தெளித்து மங்கலக்கோலமிட்டு, காவி பூசுவர். அரக்கு நிறம் துர்க்கைக்குரியது.
துக்கம் வராமலிருக்க கஷ்டங்கள் தொலைய, மங்கல வாழ்வு நிலைக்க செம்மண்
பூசப்படுகிறது. இன்று ஆதித்ய இருதயம், சூரிய ஸ்லோகம் படிப்பது நல்லது.
பொங்கல் பாத்திரத்தில் மஞ்சள் குங்குமமிட்டு, பசு மஞ்சளைப் பிணைத்த கயிறைக்
கங்கணமாகக் கட்டி அவரவர் சம்பிரதாயப்படி பொங்கல் வைக்கவேண்டும். தீபாராதனை
காட்டும் போது குல தெய்வத்தையும் மூதாதையரையும் பிரார்த்தனை செய்தால்
நல்லதே நடக்கும். இன்றிலிருந்து உத்தராயண புண்ய காலம் ஆரம்பம்.
