book

அவள் வரும் நேரம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அன்பு முருகசாமி. வி
பதிப்பகம் :வாசகன் பதிப்பகம்
Publisher :vasagan Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

னிய நண்பர் கவிஞர் ஏகலைவனின் வாசகன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் அவள் வரும் நேரம். நூல் ஆசிரியர் கவிஞர் அன்பு முருகசாமி லி. அவர்களுக்கு முதல் நூல். எல்லோருக்கும் முதலில் பூப்பது காதல் கவிதை தான். முதல் நூல் என்பதால் முழுவதும் காதல் கவிதை தான் என்று ஆசிரியர் தன்னுரையில் எழுதி விட்டார்.

காதல் கவிதைகள் மட்டும் படிக்க சுகமாக காரணம். சலிப்பே வராது. காரணம் காதல் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைக்கு உண்டு.

நூல் ஆசிரியர் பெயரிலேயே அன்பு இருப்பதால் அன்பைப் பொழிந்து காதல் கவிதை வடித்துள்ளார். பதிப்புரை நன்று. திரு. அன்பு இராமகிருஷ்ணன் சு. (ஊத்துக்குளி) அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக வரவேற்கின்றது.

காதலி அருகில் இல்லாவிட்டாலும் காட்சிக்கு வராவிட்டாலும் அவள் பற்றி நினைவு ஓர் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும். அதனை உணர்த்திடும் புதுக்கவிதை நன்று.

அன்பே !
நீ தான்
என்னிடம்
தோன்ற மறுக்கிறாய் ...
உன் நினைவுகள் அல்ல.

காதலின் அடுத்தக் கட்டம், கூடல், தீண்டல், அணைப்பு. உணர்ந்தவர்கள் மட்டும் உணரும் உண்மை உணர்வு காதல்.