book

பாரதிதாசன் பார்வையில் பாரதி

₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ச.சு. இளங்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :245
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429557
Add to Cart

இந்திய வரலாற்றில் இரண்டு தத்துவ மரபுகள் உண்டு. ஒன்று வைதீக மரபு. மற்றொன்று அவைதீக மரபு. வைதீக மரபு வழி நின்று சாதி எதிர்ப்பு நிலைக்கு வந்தவர்களாக இராமானுசர், விவேகானந்தர், காந்தியார், பாரதியார் ஆகியோரை குறிப்பிடலாம்.

அவைதீக மரபு வழி நின்று சாதி எதிர்ப்பு நிலைக்கு வந்தவர்களாக வள்ளலார், சித்தர்கள், பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் ஆகியோரைச் சொல்லலாம்.

நேரெதிர் முரண்பாடு கொண்ட பாரதியையும் பாரதி தாசனையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்தவை தமிழ்மொழி உணர்ச்சியும் சாதியெதிர்ப்பும் என்றால் மிகையாகாது.

பெரியாரை ஆசனாக வரித்துக் கொண்ட பாரதிதாசன் பெரியாரைக் கூட விமர்சித்தது உண்டு. ஆனால் பாரதியாரை ஒருபோதும் விமர்சித்ததில்லை.

பாரதி ஆத்திகராக இருந்த போதிலும் அவர் மீது பாரதிதாசன் அளவிடற்கரிய பற்று கொண்டிருந்தார். கனக சுப்பு ரத்தினம் எனும் தனது இயற்பெயரை பாரதிதாசன் என்று மாற்றியவர். அதற்காக கடுஞ்சட்டைத் தோழர்கள் கணை பாய்ச்சிய போதும் அவர் கலங்க வில்லை. பாரதிதாசன் பெயர் வைத்தது தவறென்று ஒரு போதும் எண்ணியதுமில்லை.சாகும் தருவாயிலும் தவறென்று வருந்தியதுமில்லை.