book

தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. செல்வமணி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜோகானஸ்பேர்க் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊர் ஆகும்.இவர் சிறுவயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை கவனித்து, ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகளுடன் போராட்டங்கள் நடத்தினார்.'சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?" என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, 'இதுதான் எங்கள் தேசியக் கொடி" என்றாராம்.

பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை தன்னுடைய 16வது வயதில் (1914) தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.