book

பேர்யாழ்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவதேவன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123426686
Add to Cart

பேர்யாழ் " என்ற கவிதைத் தொகுப்பு குளிர் காலத்தில்​ கனன்று கொண்டிருக்கும் தாயின் மார்பினில்  உறங்கும் பச்சிளங்குழந்தை போல ஒரு கதகதப்பை தந்தது. இது குளிர் காலத்தில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டான உவமை மட்டுமல்ல. தேவதேவன் கவிதைகள் என்னை குழந்தை போல கள்ளமற்ற மகிழ்ச்சி அடைய செய்தது.

தேவதேவன் கவிதைகளை சாதாரணமான செடி, கொடி, மரங்கள் பற்றிய அழகியல் கவிதை என்று சுருக்கி விட முடியாது. புத்தன்/ லாவேட்சு/ ஓஷோ கவிதை எழுதியது போல ஒவ்வொரு கவிதையிலும் அதன் ஞானச்சிதறல்கள் பட்டுத் தெறித்து உன்மத்தம் அடைகிறது. ஒவ்வொரு கவிதையும் பேரானந்தம். தமிழில் ஜென் கவிதைகள் ஒன்று உண்டெனில் அதில் இந்த தொகுப்பிற்கு முக்கியமான பங்கு வகிக்கும் என நம்புகிறேன்.