book

திருவாசகம் திருச்சதகம்

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. கதிரேசச் செட்டியார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :372
பதிப்பு :5
Published on :2012
Out of Stock
Add to Alert List

திருவாசகம் என்பது அழகிய தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய செய்யுள் நூல் என்னும் பொருளை யுடையதாகும். இது, திருவென்னும் அடையடுத்த வாசகம் என்னும் முதற்கருவியின் பெயர். அதன் காரியமாகிய செய்யுட்கு ஆயினமையின், கருவி ஆகுபெயராம் என்ப. சிவஞான முனிவரர் பிறர் கொள்கையை மறுக்குங்கால் ஆகுபெயர் என்பதை உடன் பட்டுப் பின் “உண்மையான் நோக்குவார்க்கு அன்மொழித்தொகை யாகுமன்றி, ஆகு பெயராகாமை யுணர்க" எனவுங் கூறியுள்ளார். திரு என்பது தெய்வத்தன்மை, அழகு என்னும் பொருளுடையதாகும். இத்திருச்சதக உரையை இராமச்சந்திரபுரத்துள்ளதம் மதராஸ் ரிப்பன் அச்சகத்தில், குறிப்பிட்டபடி விரைவாகவும், அழகாகவும் அச்சிட்டு உதவியவர்கள், விசுவநாதபுரம், திருவாளர்,கும.நா. குமரப்ப செட்டியாரவர்கள் ஆவர். அச்சு வேலை நிமித்தம் யான் அந்நகரில் தங்கியிருக்குங்கால், அவர்கள் எனக்கு அன்புடன் செய்த உதவிகள் பல. அந்நன்றியை என்றும் நினைவு கூர்வேன்.